Showing posts with label என் கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label என் கிறுக்கல்கள். Show all posts

Tuesday, January 14, 2014

தற்கொலை விடுதலை அல்ல...





வருணன் பூமியை முத்தமிட மறந்த நேரம்
ஏழை விவசாயி பூச்சிகொல்லியை முத்தமிட்டிருந்தான்
விவரம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கும் பாலகனையும்
தாயோடு சேர்ந்து அழுதுகொண்டிருக்கும் கருவையும் விட்டுவிட்டு...


Monday, October 08, 2012

முயற்சி...



முயற்சி...

என் முயற்சியில்
ஓவ்வொரு முறையும்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்

உன்னை கவர
உன் நினைவுகளில்
இருந்து மீள...

Sunday, October 07, 2012

கைதி




கைதி

வெள்ளிக் கிண்ணம்
வெண் சோறு
பச்சைக் கிளி

ஈயத் தட்டு
மஞ்சள் சோறு
மானமில்லா மனிதன்

வித்தியாசம் இல்லை
இருவரும் கைதிகள்

ஏற்றுக்கொள்...


ஏற்றுக்கொள்

உன்னிடம் அடைக்களமாக காத்திருக்கின்றன
உன் நினைவுமாறா என் இதயமும்
முள்ளில்லா சிவப்பு ரோஜாவும்...

Monday, January 16, 2012

விளம்பரங்களில் தான் எத்தனை அழகு?

விளம்பரங்களில் தான் எத்தனை அழகு?

மொக்கைப் படங்களின்

நடுவில் வரும்

விளம்பரங்களில்தான்

எத்தனை அழகு?


வெயிலை சேமிக்க

இடம் தேடும் குழந்தை

சோப்புக்குள் அடைக்கும் தாய்


தான் தாயாக இருப்பதை

சிறு கோப்பையில்

காபி ஊற்றி

தெரியப்படுத்தும் மனைவி


தினமும் இனிப்பு கொடுத்து

காதல் சொல்லும் கணவன்

தோழியை தள்ளிவிட்டதற்காக

சேற்றை அடிக்கும் தோழன்


விளம்பரங்களில் தான் எத்தனை அழகு?

Monday, December 12, 2011

அவள் இல்லாத நொடி


அவள் இல்லாத நொடிகளைக் கடக்க
முள்ளுக்கும் வலிக்கிறது போலும்
மெதுவாய் நகர்கிறது...

அவள்...


மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்க்கும்
ஒரு வித்தியாசம்தான்.
அவள்...

கை கொடு


உன் நினைவுகளில்
மூழ்குகிறேன்
காப்பாற்ற கைகொடுப்பாய்
என்று...

இயற்கையின் பதில்


இயற்கையை வென்றுவிட்டோம்
என்று நினைக்கும் நொடிப்பொழுதில்
இல்லையென்று தன் சீற்றத்தால்
பதில் அளிக்கிறாள் இயற்கை...

தோழி...


பிறந்தது முதல்
ஒன்றாய்த்தான் திரிந்தோம்
நான் அரிசி கொண்டுவர‌
அவள் பருப்பு கொண்டுவந்தாள்
கூட்டாஞ்சோறு ஆக்கினோம்
மா கொய்யா
சப்போட்டா என்று
இருவரும் சேர்ந்து
திருடாத கனியுமில்லை
தோட்டமும் இல்லை
ஏனோ வரவில்லை
இரண்டு நாட்களாய்
விசாரிக்க அவள்
இல்லம் சென்றேன்
இனிமேல் விளையாட‌
வரமாட்டாள் என்றாள்
அவளின் அம்மா
அடுத்த வாரம் அவளுக்கு
நன்னீராட்டு விழாவாம்...

சுவைக்காத ஆப்பிள்




அணில் தின்றுவிட்டுப் போட்ட
கொய்யாப்பழத்தின் சுவை ஏனோ
ஏசி பழமுதிர் சோலையில்
பளபளப்பாய் மிண்ணும்
ஆப்பிளில் கிடைப்பதில்லை...